கல்முனை வடக்கு கலாசார அதிகார சபை கூட்டம்



(செ.துஜியந்தன்)


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார அதிகார சபையின் கூட்டம் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மூத்த கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இங்கு கலாசார அதிகார சபையினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவேண்டிய கலை நிகழ்வகள் பற்றி ஆராயப்பட்டது. இதற்கமைய ஒவ்வொரு மாதமும் கலை நிகழ்வுகளை நடத்துவது என தீர்மானிக்கப்ட்டது. 

செப்டெம்பர் மாதம் குறும்படம் வெளியீடு, ஒக்டோபர் மாதம் கலை நிகழ்வு,கள் நவம்பர் மாதம் கவியரங்கு டிசம்பர் மாதம் பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது என்றும் கலை நிகழ்வுகள் ஊடாக பிரதேசத்தில் இனநல்லுறவை கட்டியெழுப்புவதுடன் கலைஞர்களை கௌரவிக்கின்ற நிகழ்வுகளையும் நடத்தவுள்ளதாக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.