நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்கள் இல்லை



அமெரிக்கா அல்லது ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ள தயார்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் விடயங்கள் எவையும் இல்லை என, அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைத்திவைப்பு வேளை பிரேரணையின் போது, அரசாங்கம் இந்த விடயத்தை கூறியுள்ளது.

வெளிநாடுகளுடன் இலங்கை மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன முன்வைத்தார்.