முகாமைத்துவ உதவியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய ஆலோசனை சபையை அமைக்க வேண்டும் - தலைவர் ஏ.ஜி.முபாரக்



அனைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தின்  மீ உயர் பீட குழுக்ட கூட்டம்  (18)  சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் அவர்களது தலைமையில் மருதமுனையில் நடைபெற்றது.

இதன்போது சங்கத்தின் அதிகளவிலான  மீ உயர் பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், கூட்டத்தின் ஆரம்பத்தில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு  மறைந்த முகாமைத்துவ உதவியாளர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த கூட்டறிக்கை சங்கத்தின் செயலாளர் நாயகம் வீ.பற்குணம் அவர்களினால் வாசிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொருளாளரினால் கடந்த கால செலவறிக்கை சபையில் முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்காக எதிர்காலத்தில் எவ்வாறான நலன் திட்டங்களை பெற்றுக்கொடுக்கலாம் என்பவை தொடர்பாக மிக நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது அனைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்களுடன் நடத்துவதற்கு எமக்கு சந்தர்ப்பம் இல்லாமலுள்ளது.

எனவே, பொதுநிருவாக சுற்றறிக்கைகள் 10/2000, 02/2015 என்பனவற்றை கவனத்திலெடுத்து கிழக்கு மாகாண ஆலோசனை சபையை கூட்டுமாறு எமது சங்கம் பிரதம செயலாளரை கடந்த காலங்களில் கேட்டிருந்தது.

பிரதம செயலாளரினால் நிருவாகத்திற்கான பிரதம செயலாளரிடம் விபரம் கோரப்பட்டுள்ளதாக எமக்கு அறிவித்துள்ளபோதும் இதுவரை இது தொடர்பில் எதுவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவே விரைவாக இவ் ஆலோசனை சபை அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், இதற்கு அமைய மீண்டும் ஒரு தடவை பிரதம செயலாளருக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.