பெரியநீலாவணையில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம்



(பாறுக் ஷிஹான்)


கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இலவச வைத்திய முகாம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டு நடைபெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் உட்பட வைத்தியர் குழுவினர் இங்கு வருகை தந்து சகலவித நோயியல் நிபுணர்கள் நோய்களுக்குமான வைத்திய பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

இந்த வைத்திய முகாம் பயன்பெறுவதற்காக. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.