கிழக்கு மாகாண சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டு விழா – 2019

கிழக்கு மாகாண சுகாதார சேவைத் திணைக்களத்தின் கீழ் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கிடையில் வருடாந்தம் நடைபெறும் விளையாட்டுப் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 13,14 ஆந் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இவ் விழா ஆண்டு தோறும் நடைபெறுவதுடன் இம்முறை 8 ஆவது தடவையாக நடைபெற்றது.  இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் முன்னின்று நடாத்தியது 

மிகவும் கோலாகலமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் DR . M. அச்சுதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா அங்குராப்பண  நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  A.H.M.அன்சார் அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் .K.கருணாகரன் அவர்களும் விசேட அதிதிகளாக ஓய்வு பெற்ற முன்னாள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.K.முருகானந்தன், ஓய்வு பெற்ற முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் DR.S.சதுர்முகம், மற்றும் அதிதியாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  DR.S.அருள்குமாரன், பிரதி மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் DR.A.லதாகரன் மற்றும் நான்கு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் நிகழ்ச்சிகள் உட்பட உள்ளக, வெளியக விளையாட்டுகள் பல நடைபெற்றன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் 102 புள்ளிகளைப் பெற்று 1ம் இடத்தில் தங்கள் வெற்றி வாகையை சூடிக் கொண்டதுடன் 2ம் இடத்தை 55 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 43 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.