பயங்கரவாதிகளை விடுவிப்பதாக பணம் பெற்றவர் கைது

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பயங்கரவாத சந்தேக நபர்களை விடுவித்துத்தருவதாக கூறி சுமார் 17இலட்சத்து 15ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
கொழும்பு, கொட்டிகாவத்தையைச் சேர்ந்த மொஹமட் யூசுப் மொஹமட் ஸ்மித் (48) எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலி ஸார் தெரிவிக்கின்றனர்.  
குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பயங்கரவாத சந்தேக நபரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு பயங்கரவாத சந்தேக நபர்களையும் விடுவிப்பதாயின் அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டுமெனக்கூறி சந்தேக நபர்களின் உறவினர்களிடமிருந்து 17 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணத்தை அந்நபர் பெற்றுள்ளார்.    இது தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.