இலங்கையில் சிறுவர்கள் தற்கொலைகள் அதிகரிப்பு



சிறுவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக கூறியிருக்கும் மனநல ஆலோசகர் வைத்தியர் விஜயந்த கொத்தல்லாவ கடந்த வருடம் மாத்திரம் இலங்கையில் 76 சிறுவர்கள் தற்கொலை கொண்டதாகவும் அவர்களில் 65 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தின் தரவுகளுக்கு அமைய கடந்த வருடத்தில் 8 தொடக்கம் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை மன்றக்கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ள விசேட கருத்தரங்கு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.