சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு

மு.கோகிலன்

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிண்ணையடி, கொண்டயன்கேணி, முறாவோடை போன்ற கிராமங்களில் சுழல் காற்றினால்; ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு  கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகஸ்த்தர் எம்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எ.தனபாலசுந்தரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலையை வழங்கி வைத்தார். கடந்த ஜூலை மாதம் மேற்குறித்த கிராமங்களில் ஏற்பட்ட அனர்த்ததினால் வீடு, கட்டிடம், கூரைகள் சேதமடைந்திருந்தமையால் இம் மக்களுக்கு இவ் உதவி அனர்த்த நிவாரண அமைச்சினால் வழங்கி வைக்கப் பட்டது.