அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கிவைப்பு



--கனகராசா சரவணன்--

மட்டகளப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும் நிகழ்வு மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் .எஸ்.சியாத் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய ஒருங்கிணைப்பாளர் ர.சிவநாதன் கலந்துகொண்டு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் கீழ் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மடி கணணிகளை வழங்கிவைத்தனர்ர்.

இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அவசர அனர்த்த நிலைமைகளின் போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கல் முண்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரதேசமட்ட திட்டங்கள் தயாரத்தல் ரூபவ் தகவல்களை பரிமாறல்ரூபவ் தரவுகளை பேணல் போன்ற நடவடிக்கைக்கு ஏதுவாக மட்டகளப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகளை பெற்று கொடுக்கவேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்தார்.


இந்த நிகழ்வில் பதினான்கு பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற அனர்த்த நிவாரண சேவைகள் உத்தி யோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.