மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டத்தில் சாதனை

(Ravindramoorthy)

தேசிய ரீதியிலான தமிழ்மொழித் தினப் போட்டியில் மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 'கலார்ப்பணா நாட்டிய நிலையம்' மாணவி செல்வி. குணசீலன் அபிராமி 5ம்  பிரிவு தனி நடனப் போட்டியில் 3ம் இடத்தினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (13.09.2019) நடைபெற்ற தேசிய மட்டத்திலான போட்டியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மாணவிக்கும்  மாணவியை நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி. சசிகலாராணி ஜெயராம் அவர்களுக்கும் இப்போட்டிக்குப் பக்கவாத்தியம் வழங்கிய செல்வன். ஜெயராம் யுதிஷ்ரன் அவர்களுக்கும் 'கலார்ப்பணா நாட்டிய நிலையம்' மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலைச் சமூகமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.