மட்டக்களப்பில் விகாரை வளாகத்தில் இந்துக் கோவில் கும்பாபிசேகம்


 இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில், மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி கோவிலின் பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம், நேற்று (07) நடைபெற்றது.

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய, ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் இக் கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய கோவில் பிரதமகுரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகி, யாகங்கள் நடைபெற்றதுடன், ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, எண்ணெய்க் காப்புச் சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது.