காட்டு யானைகள் தொடர்பாக தொகை மதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. தொகை மதிப்பீடு எதிர்வரும் 13ஆம், 14 ஆம் திகதிகளில் இடம்பெறவிருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லக்ஷ்மன் பீரிஸ் தெரிவித்தார்.
நீர் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு பகுதியில் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகை மதிப்பீட்டிற்கு அமைய நாட்டில் 5,879 காட்டு யானைகள் உள்ளமை தெரியவந்துள்ளது.