தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மட்டக்களப்பு அலுவலகத்தில் பிரியாவிடை நிகழ்வு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் கடமையாற்றிய ஐ.பத்மநாதன் மற்றும் எஸ்.சுப்பரமணியம் ஆகியோர் ஒய்வு பெற்றுச் செல்வதனால் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ.பிரகாஷ் தலைமையில் அலுவலக கேட்போர் கூடத்தில் 2019.09.19 ஆம் திகதி இடம் பெற்றது.


அதன் போது ஒய்வு பெற்றுச் செல்லும் இருவருக்கும் அவர்களது சேவையினை பாராட்டி பிராந்திய முகாமையாளரினால் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட பொறியியலாளர் ஏ.எல்.எம்.பிர்தௌஸ், பொறியியலாளர் தினேஷ்குமார் (இயக்குதல், பராமாரிப்பு) மற்றும் அங்கு கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.