சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

( எரிக் )
மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலையின் 29 வது ஆண்டு நினைவு தினம் நேற்று  மாலை உணர்வுபூர்வமான நடைபெற்றது.

சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரால் சத்துருக்கொண்டான்,கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பினித் தாய்மார் பச்சிளம் குழந்தைகள்,ஆங்கவீனம் அடைந்தவர்கள் என186 பேரை அழைத்துச் சென்று படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் 85, பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்  படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை நினைவுகூரும் வகையில் வருடாந்த் குறித்த படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,அரசியல்வாதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது உணர்வுள்ள உறவுகள் அமைப்பினால் தாகசாந்தி நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.


இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான விசாரணைகள் நடைபெற்ற போதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.