நான் யாருடைய முகவராகவும் தேர்தலில் போட்டியிடவில்லை- ஹிஸ்ப்புல்லா தெரிவிப்பு



நான் யாருடைய முகவராகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முஸ்லிம் சமூகத்தின் முகவராக மாத்திரமே போட்டியிடுவதாக, ஜனாதிபதி வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


மற்றொரு வேட்பாளர் தனிப்பட்ட காரணங்களுக்காக எல்பிட்டியவை விட்டு மேல் மாகாணத்துக்கு ​ெசன்றார். இந்த கஷ்டங்களுக்கிடையில்தான் நாம் தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. கடந்த தேர்தலின் போது கூட நாம் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதில்லை. சில தொகுதிகள் குறிப்பிட்டவொரு அரசியல்கட்சிக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

மத்திய கொழும்பை நாம் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டை என்று கூறுவோம். அது போலத்தான் எல்பிடடியவும். எல்பிட்டிய பிரதேச சபையின் வெற்றி ஜனாதிபதி தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று இவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாம் இந்த தொகுதிகளில் தோல்வியடைந்திருந்தோம் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரதேச சபைத் தேர்தலைப் போன்றதல்ல. கடந்த முறை நாம் காலியில் தோற்றோம். ஆனால் மஹியங்கனை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் மட்டுமன்றி கண்டி, ஹற்றன் ஆகிய இடங்களிலும் வெற்றிபெற்றோம்.
இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் இந்த இடங்களை மட்டுமின்றி மேலும்பல தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்.

எனவே எல்பிட்டிய பிரதேச சபை வெற்றியுடன் ஜனாதிபதி தேர்தலை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல என்று அவர் மேலும் கூறினார்.