கல்முனைக்கு தேர்தல் பரப்புரைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வருகை


(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஸ  வருகை தந்துள்ளார்.



செவ்வாய்க்கிழமை இன்று  (22) காலை 11 மணியளவில் நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுளில் ஈடுபட்ட பின்னர் நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் நாமல் ராஜபக்ச பங்குபற்றினார்.

இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம , அம்பாறை நகர முதல்வர் , கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.