வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் உலக ஆசிரியர் தின நிகழ்வு



சர்வதேச உலக ஆசிரியர் தினமானது ஒக்டோபர் 5ம் திகதி கொண்டாடப்படுகின்ற போதிலும் இலங்கையில் ஒக்டோபர் 6ம் திகதி கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் ஒக்டோபர் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததால் மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் உலக ஆசிரியர் தினம் ஒக்டோபர் 10ம் திகதி வியாழன் கொண்டாடப்பட்டது.


இதன்போது மாணவர்கள் ஆசிரியர்களை கௌரவித்ததுடன் ஆசிரியர்கள் விவாதம், நடனம் என்பவற்றில் ஈடுபட்டு மாணவர்களை மகிழ்வுபடுத்தினர் . இவ்வருட ஆசிரியர் தின தொனிப்பொருளான “ ஆசிரியர் சேவையில் இளம் சமூகத்தினரின் பங்களிப்பு” என்பதற்கமைய வித்தியாலய அதிபர் உரை நிகழ்தினார்

மேலும் வித்தியாலய அதிபரினால் ஏற்கனவே விடுக்கப்பட்ட வேண்டுகளுக்கிணங்கி ஆசிரியர்களான திரு. ச. அன்ரன் டெஸ்மன், அருட் திரு. மெருஷன் ஹென்றிக் அவர்களால் பாடசாலை கேட்போர் கூடத்தின் மேடைக்கான “Pulpit” இச்சிறப்புத் தினத்தில் வழங்கிவைக்கப்பட்டது.