முன்னாள் சபாநாயகர் , நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் செலுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது