குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதினம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னால் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதினம் (14.11.2019) இன்று கட்சியின் பிரதித்தலைவர் க.யோகவேள் தலைமையில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதிச் செயலாளர் சி.ஜெயராஜ், அமரர் நந்தகோபனின் சகோதரர் கு.நளினகாந்தன் மற்றும் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், தொகுதி, பிரதேச, உள்ளுர் அமைப்பாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.