பொதுஜன பெரமுனவுக்கும் 14 சிறிய கட்சிகளிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் 14 சிறிய கட்சிகளிற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (திங்கட்கிழமை) கைச்சாத்திட்டப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழர் மகாசபை, சிறி ரெலோ கட்சி, இலங்கை மக்கள் தேசியக் கட்சி, ஜனதா சேவகா கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி, இந்திய தேசியக் கட்சி, புதிய ஜனநாயக மக்கள் கட்சி, தேசபக்தி ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி, ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய சோசலிச முன்னணி உள்ளிட்ட கட்சிகளே கையெழுத்திட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள குறித்த 14 கட்சிகளும் இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்த கட்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.