அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 523 வாக்களிப்பு நிலையங்களில் 503790 பேர் வாக்களிக்க தகுதி

(பாறுக் ஷிஹான்)


அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 523 வாக்களிப்பு நிலையங்களில் 503790 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் கல்முனை தேர்தல் தொகுதியில் 76283 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 89057 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 143229 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 174385 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைக்காக இம்மாவட்டத்தில் 6470 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குகள் எண்ணும் நிலையங்கள் 53 இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வாகன போக்குவரத்துக்கள் இலவசமாக முன்னேடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவகருமாகிய டி.எம்.எல் பண்டாரநாயக்க தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப வளாகத்தில் இருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் காலை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் சம்மாந்துறை கல்முனை திகாமடுல்ல ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்கெடுப்பு நிலையங்களை சென்றடைந்தது முதல் பொலிஸ் நடமாடும் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.