மட்டக்களப்பு கச்சேரிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்த கட்சி ஆதரவாளர் கைது



மட்டக்களப்பு கச்சேரிக்குள் அனுமதியின்றி அரச அதிபரின் அறைக்குள் நுழைந்து   அடாவடித்தனம் செய்தவர் மட்டக்களப்பு தலைமையாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இன்று காலை கணநாதன் டினோஜித் எனும் நபர் அரசாங்க அதிபரின் அனுமதி இன்றி அரச அதிபரின் அறைக்குள் நுழைந்து மேசை மேலே ஏறி சுவரில் தொங்க விட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் படங்களை கழட்டி வீசி அடாவடித்தனம் செய்துள்ளார்.
இதையடுத்து பொலிசிற்கு அறிவிக்கப்பட்டு  குறித்த நபர் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  மட்டக்களப்பு லேக் வீதியில் வசிக்கும் குறித்த நபர் ஏற்கனவே வாக்கு என்னும் இடத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார் .