போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவள ஆலோசனை கருத்தரங்கு


(LEON)
போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவள ஆலோசனை கருத்தரங்கு நேற்று  பிற்பகல் மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி கிளை அலுவலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது . மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை பிரிவுகளில் போதைப் பொருளற்ற ஆரோக்கியாமான சமூகத்தை உருவாக்குவோம் செயல்திட்டத்தினை மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் வங்கி முகாமையாளர் திருமதி கே. லதா கோகுலகாசன் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவள ஆலோசனை கருத்தரங்கு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி கிளை அலுவலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வளவாளராக உளநல மருத்துவ சேவை ஆலோசகரும் .வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார் ,கலந்துகொண்டார்

கருத்தரங்கில் இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர்.