மட்டக்களப்பில் இரு நாட்டகளாக பிரதமர் ரணில் முகாமிட்டு தீவிர பிரச்சார நடவடிக்கையில்



(saravanan)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தேடி மட்டக்களப்பில் இன்று இரண்டாவது நாளாக தீவிர பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார் .
மட்டக்களப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார் .

இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை (06) காலை 11 மணியளவில் மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் வணபிதா யோசப் பொன்னையா அவர்களை ஆயர் இல்லத்தில் சந்திதது ஆசிவேண்டினார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று விசேட விழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் பிரச்சார நடவடிக்கைக்காக மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட பிரதான காரியாலயத்தில் மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களை பிரதமர் ரணில் சந்தித்து உரையாடினார்.

இதனைத் தொடர்ந்து ஈழவர் ஜனநாயக முன்னனி ( ஈரோஸ்) தலைவர் இரா பிரபாகரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியுடன் இணைந்த மட்டு சின்ன ஊறணியில் அமைக்கப்பட்ட காரியாலயத்துக்கு பிரதமர் சென்று அக்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உரையாடினார்.