அமைச்சரவை ஊடக பேச்சாளர்கள் நியமனம்



அமைச்சரவை ஊடக பேச்சாளர்களாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் பெருந்தோட்டத் துறை, ஏற்றுமதி விவசாயம் அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தார்.