ரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் பலி



யாழ்ப்பாணம் – நாவலர் வீதி இன்று முற்பகல் 9.00 மணியளவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்தார்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.