வாழைச்சேனையில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை



(மு.கோகிலன்)
வழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கருணைபுரத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



மாரிமுத்து சுரேஸ்குமார் வயது 36 என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன் கிழமை மாலை கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வாய்தர்க்கம் வலுப்பெற்றதனை தொடர்ந்து கணவன் கூரிய ஆயுதத்தினால் மனைவியை தாக்க முற்பட்டதாகவும் அவ்வேளை மகன் அதனை தடுக்க முற்பட்டதாகவும் மனைவி  தற்காப்பிற்காக பொல்லால் கணவனை தலையில் தாக்கியதாக விசாரணையின் போது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமுற்ற 16 வயதுடைய மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.