மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா



(LEON)

மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று  நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் 2017 – 2018 வருடத்திற்கான பரிசளிப்பு தின நிகழ்வு கல்லூரி அதிபர் . வி .முருகதாஸ் தலைமையில் மட்டக்களப்பு சீலாமுனை சின்னராஜா மண்டபத்தில் நடைபெற்றது. .

வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு ,கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நாடத்தப்பட்ட நாடக போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தினை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக , அருட்தந்தை ஆர் .திருச்செல்வம் ,சிவஸ்ரீ , ஜெகதிஸ்வரக் குருக்கள் , பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர் திட்டமிடல் வை சி சஜீவன் வலயக்கல்வி அலுவலகர் , ஆசிரியர் ஆலோசகர்  ஜி .கிருஷ்ணமூர்த்தி மற்றும் வித்தியாலய ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , வித்தியாலய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.