சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் தொடர்பான ஐந்தாம் கட்ட வினைத்திறன் பயிற்சி செயலமர்வு



(LEON)

சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் தொடர்பான ஐந்தாம் கட்ட வினைத்திறன் பயிற்சி
செயலமர்வு நேற்று  மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின்
ஏற்பாட்டில் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் திட்டத்தின்
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும்  வகையில் சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் தொடர்பாக விடுதி உரிமையாளர்களுக்கான ஐந்தாம் கட்டமாக வினைத்திறன் பயிற்சி செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது .

மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே.குகதாஸ் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களான என் .நிறோசன் , கே பேரின்பராஜா , எஸ் .ஜெயபாலன் , வி .மனோகரன் மற்றும் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன திட்ட இணைப்பாளர்ஆர் பிரசாந்தன் , திட்ட உத்தியோகத்தர் எஸ் .பிரதீஸ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.