விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!



விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சபையின் பிரதிப்பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வாக்களிப்பதற்கான தமது ஊர்களை நோக்கிச் செல்பவர்களுக்காகவே இந்த விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நாளை முதல் தேர்தல் பணிகளுக்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.