மதுபான சாலைகளுக்கு பூட்டு



நாடு முழுவதும் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் மதுபான நிலையங்களை முடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தலைத் தொடர்ந்து வன்முறைகள் எதுவும் இடம்பெறாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.