முன்னாள் கிழக்கு ஆளுனர் மற்றும் தமிழரசு பொதுச் செயலாளருக்கிடையில் சந்திப்பு

முன்னாள் கிழக்கு ஆளுனர் மற்றும் தமிழரசு பொதுச் செயலாளருக்கிடையில் சந்திப்பு…


முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றைய  தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் இடம்பெற்றது.

தேர்தல் விடயங்கள், மாவட்ட ரீதியான நிலைப்பாடுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், தேர்தல் நேரங்களில் கையாளப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வி.பூபாளராஜா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.