மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் கண்ணீரோடு மாவீரர்களுக்கான அஞ்சலி

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரா துயிலும் இல்லத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வுநேற்று புதன்கிழமை 06.05 மணிக்கு இடம்பெற்றது

பிரதேச இளைஞர் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களின் நினைவாக ஈகை சுடரை ஏற்றி வைத்தனர். கடும் காற்று மழையினை பொருட் படுத்தாது இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு தென்னங்கன்று வழங்கிவைக்கப்பட்டது.