O/L பரீட்சைக்கு 20 சிறைக் கைதிகளுக்கு 2 பரீட்சை நிலையங்கள்



க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு இம் முறை சிறைக் கைதிகள் 20 பேர் தோற்றவுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் 02ஆம் திகதி க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைக்கைதிகள் 20 பேரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் நேற்று தெரிவித்தது.

இச் சிறைச்சாலைகளில் அமைக்கப்படவுள்ள விசேட பரீட்சை நிலையங்களில், பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் சிறைக்கைதிகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.