தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு நாளை



ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டாவது கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது.

இதற்கமைய நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் ஆணைக்குழுவின் மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.