மட்டக்களப்பு மண்முனை பற்று பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் நிவாரணம்

(leon)
மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிழக்கு கிராம சேவை பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் (08) வழங்கி வைக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றத்தினால் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடைத்தங்கல் முகாம்களிலும் , உறவினர்களின் வீடுகளிலும் தங்கி இருந்தவர்கள் தற்போது தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் தமது அன்றாட தொழில் துறைகளின் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அரச அலுவலகங்கள் ,அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் உலர்வுணவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு நகர் மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாயால் நிர்வாகத்தினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிழக்கு கிராம சேவை பிரிவில் உள்ள குடும்பங்களுக்கான உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த உலர்வுணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி . நமசிவாயம் .சத்தியானந்தினி மற்றும் மண்முனை பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ் .மகேந்திரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்