தேசிய புலனாய்வுச் சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே!



தேசிய புலனாய்வுச் சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னர் பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த பிரிகேடியர் துவான் சுரேஷ், 1992 ஆண்டு இராணுவ புலனாய்வு பிரிவில் இணைந்துகொண்டார்.

1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை இராணுவ புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தமிழீழ விடுதலை புலிகளில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்தார்.

2012 ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.