ஒரு தொகை சிகரட்களுடன் ஒருவர் கைது!


சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து ஒரு தொகை சிகரட்களை கொண்டுவர முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து வருகை தந்த 20 வயதுடைய நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 11 இலட்சத்து 88 ஆயிரம் ரூபா பெறுமதியான 19,800 சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.