இராணுவ வீரரொருவரின் சடலம் கண்டுபிடிப்பு


திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவ வீரரொருவரின் சடலமொன்று இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம் – 96ம் கட்டை திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த ஐயந்த கொடிகார (35 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை இராணுவ 22 வது படைப்பிரிவில் கடமையாற்றும் இவர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றதாகவும் அரச மர சந்தியில் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலேயே காணப்படுவதாகவும் விசாரணை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.