மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி


(leon) மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி (08) மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஒப்பு கொடுக்கப்பட்டது

உலகத் திருச்சபையின் திருவழிபாட்டின் 2019 ஆண்டின் புனித மரியாளின் அமல உற்பவப் பெருவிழாவின் முன்னோடியாக விசேடத் திருப்பலி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரினால் ஒப்பு கொடுக்கப்பட்டது

இத்திருப்பலியினை சிறப்பிக்கும் வகையில் புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்கு மாணவர்களுக்கு திவ்விய நற்கருணை ,உறுதி பூசுதல் அருள் அடையாளங்கள் ஆயரினை வழங்கி வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்கு தந்தை சி வி . அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில் மறைக்கல்வி ஆசிரியர்கள் ,அருட்சகோதரிகள் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற விசேட திருப்பலியில் உதவி பங்கு தந்தை ஜூட் குயின்டன்ஸ் மற்றும் பங்கு மக்கள் கலந்துகொண்டனர்