தேயிலை இறக்குமதி ,மீள் ஏற்றுமதி முற்றாக தடை



இலங்கை வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதினை முற்றாக தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேயிலை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.