முகாமில் தங்கியுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு இலங்கை இந்துமாமன்றம் , அம்பாரை மாவட்ட சிவநெறி அறப்பணி மன்றத்தினர் ஆடைகளை வழங்கி வைத்தனர்.

(வி.சுகிர்தகுமார்)
வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு இலங்கை இந்து மாமன்றத்தின் நிதியீட்டத்துடன் அம்பாரை மாவட்ட சிவநெறி அறப்பணி மன்றத்தினர் பட்சீட் உள்ளிட்ட ஆடைகளை வழங்கி வைத்தனர்.

அம்பாரை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க மக்களின் நிலைமையினை நேரில் பார்வையிட்டதுடன் இடைத்தங்கல் முகாமிற்கு சென்று அங்கிருந்த மக்களுக்கு அம்பாரை மாவட்ட சிவநெறி அறப்பணி மன்றத்தினரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட பட்சீட் உள்ளிட்ட ஆடைகளை வழங்கி வைத்தார்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் அம்பாரை மாவட்ட சிவநெறி அறப்பணி மன்றத்தினரும் இணைந்து இருந்தனர்.