மட்டக்களப்பு சகாயபுரம் புதுமைபுரம் பங்கு திருச்சபையின் மறை கல்வி மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா


(leon)
மட்டக்களப்பு சகாயபுரம் புதுமைபுரம் பங்கு திருச்சபையின் மறை கல்வி மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு (08) மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் சகாயபுரம் புதுமைபுரம் பங்கு

திருச்சபையின் மறை கல்வி மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள் பங்கு தந்தை அருட்பணி ஆர் . திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் மட்டக்களப்பு சீலமுனையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

நடைபெற்ற வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் சிறார்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மறைக்கல்வி மாணவ சிறார்களுக்கு, அதிதிகளினால் பரிசில்களும், வழங்கி வைக்கப்பட்டன

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் மற்றும் அதிதிகளாக மாவட்ட கிறிஸ்தவ சமய உத்தியோகத்தர் திருமதி .ரேகா நிருபன், அருட் சகோதரிகள், ஆலய பக்தி சபை உறுப்பினர்கள் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் , கிராம அபிவிருத்தி குழு உறுப்[பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இன்று நடைபெற்ற மட்டக்களப்பு சகாயபுரம் புதுமைபுரம் பங்கு திருச்சபையின் மறை கல்வி மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் மறைக்கல்வி மாணவ சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.