(எப்.முபாரக்)
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 13 உடன் நபர் ஒருவரை இன்று(21) கைது செய்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த சந்துன்கமயைச் சேர்ந்த 77 வயதுடைய ஒருவரே இவ்வாறு போலி நாணயத் தாள்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் புல்மோட்டை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றிற்கு சென்று அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் 5000 ரூபா நாணயத்தாள்களை மாற்றி தருமாறு கேட்டுள்ளார்.
குறித்த நாணயங்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினால் குறித்த பாதுகாப்பு அதிகாரி நிதி நிறுவனத்தின் முகாமையாளருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் ஸ்லத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்ட போதே சந்தேக நபரிடமிருந்து ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 13 மூன்றுடன் கைது செய்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.