அவர்களுள் 5 இலங்கையர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு எதிராக மெல்பர்ன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குழுவினர் சுமார் இரண்டு மாத காலமாக குறித்த விற்பனை நிலைய வளாகத்தில் மற்றும் ரயில் நிலையங்களில் பிற நபர்களின் பணப் பைகளை கொள்ளையிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் 26 வயதுடைய யுவதி ஒருவரும் மற்றும் வயது 25 க்கும் 32 க்கும் இடைப்பட்டவர்கள் நால்வரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.