மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியானது!


சுற்றுலா மற்றும் விமான சேவை இராஜாங்க அமைச்சுப் பதவிக்கான விடயதானங்கள் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கையெழுத்துடன் இராஜாங்க அமைச்சருக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு பணியகம் ஆகிய நிறுவனங்கள் இராஜாங்க அமைச்சரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.