ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.

இந்த சந்திப்பு சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாகவும் பொதுத் தேர்தலுக்காக அனைவரையும் ஒரு முன்னணியாக ஒன்றிணைப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக வெளியிடப்படும் தொலைபேசி உரையாடல்களின் குரல் பதிவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.