மட்டக்களப்பு மாவட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


சிடாஸ் கனடா நிறுவனத்தின் இலங்கை சிடாஸ் சிறிலங்கா கிளையின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அமர்த்தின் போது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பாதிக்கப்பட்ட 07 பாடசாலைகளில் சுமார் 1500 மாணவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இலங்கை சிடாஸ் சிறிலங்கா கிளையின் தலைவரும் ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளருமான கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் , ஓய்வுநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளரும் இலங்கை சிடாஸ் சிறிலங்கா கிளையின் செயலாளருமான ஏ .சுகுமாரன் ,,பொருளாளர் ஜெ ,சகாயநாதன் , இணைப்பாளர் எம் .புவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இந்த உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளனர்.