எந்தவிதத்திலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவது இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேபோல் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்தவித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை எனவும் அவர் கூறினார்.
அம்பலந்தோட்ட பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அமைச்சர் இதனை கூறினார்.