கொக்கட்டிச்சோலையில் இரவுநேர வகுப்புக்கு 10ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர கற்றல்,  கற்பித்தல் வகுப்பின் 10ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (15) சனிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.


பழைய மாணவர் சங்க தலைவர் கோ.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  10ஆண்டுகளை நினைவு கூரும் வகையில் 10சுடர்கள் ஏற்றப்பட்டு,  மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் சி.சிறீதரன், ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் குருபரன், ஆசிரிய ஆலோசகர் பு.சதீஸ்குமார்,  மாணவர்கள், பழைய மாணவர்கள் இணைந்து கேக் வெட்டி ஆண்டு நிறைவினை கொண்டாடினர்.

இதன் போது,  பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பான விபரண அறிக்கை வாசிக்கப்பட்டது. மாணவர்கள்,  ஆசிரியர்கள் தமது வாழ்த்து கவிகளையும் வாசித்தமை குறிப்பிடத்தக்கது.